Actress Gallery
தீபாவளி அன்று வெளியான கேப்டன் விஜயகாந்த் போட்டோ!! போட்டோவை பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் இருக்கும் ரசிகர்கள்!!
தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்த போதே தீவிரமாக இறங்கி கலக்கியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும் நிலை வரை உயர்ந்தவர்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்தவர். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் எடுத்த சில முடிவுகள் தவறாகி விட தேமுதிக தொடர் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பின்னர் கட்சி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரின் கைகளுக்கு மாறின. தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபட முடியாமல் விஜயகாந்த் இருக்கிறார். இருப்பினும் பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் முடிந்தவரை விஜயகாந்தை தலைகாட்ட வைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை தமிழக மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார். அப்போது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் மாஸ்க் அணிந்த படி கையில் மத்தாப்பு பிடித்து கொண்டிருக்கிறார். மேலும் இதுபோன்ற கேப்டனின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம். சிங்கமாக பார்த்தவரை இந்த நிலைமையில் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது என்று சிலர் பதிவிட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆரோக்கியத்துடன் கேப்டன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இன்று (12.11.2023) சாலிகிராமத்தில் உள்ள, நமது இல்லத்தில் தீபாவளியை கொண்டாடிய போது எடுத்த படம்… #தீபாவளி_வாழ்த்துக்கள் pic.twitter.com/Kk0Nk7nCbR
— Vijayakant (@iVijayakant) November 12, 2023